search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறுவாழ்வு இல்லம்"

    • பி.வி.எம். மனவளர்ச்சி குன்றியோருக்கான மறுவாழ்வு இல்ல திறப்பு விழா நடந்தது.
    • முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று திறந்து வைத்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம்-கீழக்கரை இடையே இ.சி.ஆர். ரோட் டில் பள்ளப்பச்சேரி பஸ் நிறுத்தம் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள பி.வி.எம். மனவளர்ச்சி குன்றியோருக் கான மறுவாழ்வு இல்ல புதிய கட்டிடம் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவிற்கு பி.வி.எம். அறக்கட்டளை காப்பாள ரும், மலேசிய பிரபல ஆடிட் டருமான ஹாஜி. அன்சாரி இபுராகிம் தலைமை தாங்கி னார். பி.வி.எம். அறக்கட்ட ளையின் திட்ட இயக்குனர் சித்தார்கோட்டை ஜமாத் முன்னாள் தலைவர் அல் தாப் உசேன் வரவேற்றார்.

    ராமநாதபுரம் மாற்றுத்தி றனாளிகள் நலத்துறை மாவட்ட அதிகாரி பாலசுந்த ரம், கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார், திருப்புல் லாணி யூனியன் சேர்மன் புல்லாணி, திருப்புல்லாணி வி.ஏ.ஓ. பாலமுருகன், திருப் புல்லாணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகை ராஜா, தாதனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர்.கோகிலா ராஜேந்தி ரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பி.வி.எம். அறக்கட்டளை யின் நிறுவனரும், நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெட ரேஷன் தேசிய தலைவ ருமான டாக்டர்.அப்துல் ரசாக் அறிமுக உரையாற்றி னார். கீழக்கரை முகம்மது சதக் என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் ஜனாப் எஸ்.எம்.என்.அஹமது ஹூசைன் ஆஸிப் சிறப்புரை ஆற்றி னார்.

    பி.வி.எம். மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான மறுவாழ்வு இல்லம் புதிய கட்டிடங்களை பி.வி.எம். அறக்கட்டளை காப்பாளர் அன்சாரி இபுராகிம், நிர் வாக தலைவர் சித்தார் கோட்டை முஹம்மதியா பள்ளிகள் இணைத்தலைவர் புருனை தொழிலதிபர் ஹாஜி. எஸ்.டி.முஹம்மது ஷாஜகான், பி.வி.எம். அறக் கட்டளை ஆலோசகர் மலே சியா (பனைக்குளம்) கோப் பத்தா குரூப் சேர்மன் டத்தோ அல்ஹாஜ். கோப் பத்தா முஹம்மது இபுராகிம்,

    அறக்கட்டளை ஆலோ சகர் புதுவலசை மலேசியா டத்தோ ஹாஜி.அலிகான், அறக்கட்டளை பொதுச்செ யலாளர் புதுமடம் வடக்கு தெரு ஜமாத் பொருளாளர் ஹாஜி. சாகுல் ஹமீது ஆகி யோர் திறந்து வைத்தனர். விழாவில் கொடையாளர் கள், அரசு அதிகாரிகள், வரு வாய்த்துறையினர், காவல் துறையினர், மருத்துவ துறை யினர், மாற்றுத்திறனாளி கள் நலத்துறையினர், தொழில் அதிபர்கள், டாக்டர்கள், பொறியாளர் கள், வழக்கறிஞர்கள், அரசி யல் பிரமுகர்கள், ஜமாத் தார்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

    விழாவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளில் சிறந்த ஊராட்சியாக திருப்புல் லாணி ஊராட்சி ஒன்றியம் தாதனேந்தல் ஊராட்சியை தேர்வு செய்து அதன் தலை வர் டாக்டர். கோகிலா ராஜேந்திரனிடம் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.மேலும் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் தாதனேந்தல் ஊராட்சிக்குட்பட்ட பள்ளப் பச்சேரியைச் சேர்ந்த திரைப்பட நடிகரும், நவீன கோடாங்கி என்ற நிகழ்ச்சி மூலம் பல்வேறு விழிப்பு ணர்வு குறும்படங்கள் தயாரித்து பொதுமக்கள் சேவைக்காக தமிழக மக்கள் எழுச்சி கழகம் என்ற கட்சியை தொடங்கி கிராம மக்க ளிடையே பெரும் வர வேற்பை பெற்ற ராஜேந்தி ரனுக்கு சேவை திலகம் விருதுடன் பாராட்டு சான்றி தழ் வழங்கி கௌரவிக்கப் பட்டார்.

    தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பல் வேறு வகைகளில் சமூக சேவை செய்தவர்களுக்கு விருதுகள், கேடயம், பதக்கம் முக்கிய பிரமுகர்களால் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பி.வி.எம். அறக்கட்டளை நிறுவனரும், நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் தேசிய தலைவருமான டாக்டர்.அப்துல் ரசாக், அறக்கட் டளை ஆயுள் கால தலைவர் புதுமடம் வடக்கு தெரு ஜமாத் முன்னாள் தலைவர் ஹாஜி பக்கீர் முஹம்மது மற்றும் நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் மாநில பொருளாளர் முகவை மூத்த பத்திரிகை யாளர் இ.சிவசங்கரன் ஆகியோர் தலைமையில் அறக்கட்டளை நிர்வாகிகள், பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    முன்னதாக அறக்கட் டளை நிறுவனர் அப்துல் ரசாக் ஏற்பாட்டில் பி.வி.எம். கட்டிட வளாகத்தில் குமரய்யா கோவில் பாரதி நகர் அல்பாரி ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் அக்பர் அலி தலை மையில் 25-க்கும் மேற்பட்ட ஆலிம்களால் சிறப்பு மவ்லிது ஓதப்பட்டு கட்டிடத் திற்கு நன்கொடை வழங்கிய அனைவருக்கும் தூஆ செய் யப்பட்டது. பின்னர் பி.வி.எம். அறக்கட்டளைக்கு வித்திட்ட சித்தார் கோட்டை முகம்மதியா பள்ளிகளின் முன்னாள் தலைவர் மர்ஹீம் தஸ்தக்கீர் என்பவருக்கு சிறப்பு துவா ஓதப்பட்டது.

    ×